June 27, 2012

"காதல்" வாசனை

எதற்காக சேர்த்து வைத்திருக்கிறாய்.?
என்று மட்டும் கேட்டு விடாதே...
நீ வீசியெறிந்த
"சாக்லெட்" காகிதங்களில் இருக்கும்
"காதல்"
வாசனை போய் விடும் 

காதலா..!?
**************************************




பார்வைகள் 
நெம்பும்போது ஏன்தான் 
பருவமடைந்தேனோ..?
என சலித்ததுண்டு...,


என்னை பைத்தியமாக்கும்
உன் காதல் கிடைத்தபின் புரிந்தது...
"உனக்கான பரிசாகத்தான்
இத்தனையும்" என்று..!!
******************************************

வாகனம் ஓட்டும்போது
கைபேசி எடுக்காதே..?!
கவனி...


நீ இப்போது தனி ஆளில்லை...
உன்னை நம்பி
நானும்...


காதலும்..!!
****************************************
நீ கேட்காத நேரம் பார்த்து
கொடுக்க வேண்டும்..!! என
சிறுக சிறுக
"முத்தம்" சேர்த்து வைத்திருப்பேன்

ஆசையாய்.....?!


நீயோ..சதா கேட்டு ஏமாற்றமடைய 
செய்வாய்..!!.



முத்தமில்லாமலே
முடிந்து விடும் 

பொழுது.

3 comments:

கருத்துக்களை பகிரலாமே...