February 22, 2012

தேவதை வழிபாடு

முன்போல் ஏன் 

கவிதை அனுப்புவதில்லை...


குறும்செய்திகள் குறைந்து விட்டதே...?


காதல் கரைந்து விட்டதா..?


என்று அடுக்கினாள்.



"தேவதை...



கிடைக்க வேண்டி செய்த 


வழிபாடுகள்தாம்..


என் கவிதைகள்...?!

நீயே  கிடைத்தபிறகு... 


வழிபாடு எதற்கு..? 


என்றேன் 



மணலில் அளாவியபடி...,