November 28, 2010

நீ "மறந்துவிடு" என்றதும்..

வலிக்கமலே அடிப்பதில் 
என் அம்மா போல 
யாருமில்லை....!!

அடிக்காமலேயே வலிக்க 
செய்வதில் 
உன்னை போல 
யாருமில்லை...!!
***************************************************
நீ 
"மறந்துவிடு" என்றதும்..
என் வீட்டிற்க்கான வழியே 
எனக்கு 
மறந்து போனது 
என் பெயரோடு சேர்த்து..!!

November 27, 2010

2 "எஸ்.எம்.எஸ்"

உன் உணவு....
காலை... 
3 தோசைகள்...
மதியம்... 
1 தயிர் சாதம்...
இரவு... 
2 ஆப்பிள்கள்....

எனக்கு 
உணவோ.....
நாள் முழுமைக்கும் 
நீ அனுப்பும் 
2 "எஸ்.எம்.எஸ்"
மட்டுமே...!?

நான் ஏன் மெலிந்திருக்கிறேன்..?
என 
உனக்கு 
இப்போதாவது புரிகிறதா?

November 25, 2010

நீ என் உயிரிலேறி விட்டாய்

உன்னை பிரிந்து 
ரயிலேறும் போதுதான் 
எனக்கு புரிந்தது...
நீ என் 
உயிரிலேறி விட்டாய் என்று..!!
என் 
இதய சுவற்றிலெல்லாம் 
உன் பெயரைத்தான் 
கிறுக்கி வைத்திருக்கின்றன 
உன் 
ஞாபக விக்கல்கள்..!!
****************************************************
அனுப்பிய அடுத்த நொடி 
உன்னிடம் வந்து சேரும் 
இந்த 
"எஸ்.எம்.எஸ்" போல...
என்னையும் 
அனுப்ப முடிந்தால் 
சுகபடுவேன் ஜீவனெல்லாம்..!!
******************************************************
வழக்கமாய் 
குடிக்கும் நேரத்தில் குடிக்கா விட்டால்
கை நடுங்கும் 
குடிகாரன்போல...
வழக்கமாய் 
நீ அழைக்கும் நேரத்தில் 
உன் அழைப்பு வரா விட்டால்
நடுங்கும் என் உயிரெல்லாம் 
பெரும் குடிகாரன்போல..!!
******************************************************
நான் 
நோய் பட்ட காலங்களில்...
உன் பெயரின் 
உச்சரிப்பே... 
என் மருந்தாகும்...!!

நீ 
நோய் பட்ட காலங்களில்...
உன் பெயரில் 
அர்ச்சனையே.... 
என் கோவில்களில்...!!

November 17, 2010

கொஞ்சூண்டு கொடு...

ஓயாமல் 
உன்னை பற்றி 
பேசிகொண்டே இருக்கும் 
என் வாயாடி மனம்...

ஓயாமல் 
நீ சரி செய்தும் 
எட்டி பார்க்கும் 
உன் "பேரழகுகள்" மட்டுமே 
என் வாயடைக்கும்..!!
**********************************
கஞ்சத்தனத்துக்கு இன்னொரு பெயர் 
நீ..
கைபேசியில் பேசும் 
ஓரிரு நிமிடங்களை போலத்தான்...
கனவிலும் வந்துவிட்டு 
ஓடி போகிறாய்..!! 
*************************************
கடவுள் எத்தனை கருணையானவர்...?
உனக்கு இத்தனை 
அழகுகளை 
அள்ளி தந்திருக்கிறார்..!!

நீயும்கூட 
ஓர் தேவதைதானே தானே..?
எனக்கு 
காதலை அள்ளி தராவிட்டாலும்...
கொஞ்சூண்டு கொடுக்கலாமே 
நீ..!! 
*************************************
என் கவிதைகளை படிக்கும் 
நண்பர்கள்,
உன்னை பற்றி விசாரிக்கிறார்கள்...
உன் சம்மதத்திற்காக காத்திருக்கும் 
என்னைபோல 
அவர்களையும் காத்திருக்க 
சொல்லி விட்டேன்..!!

காதலின் இன்னொரு முகம்.....

உன் 
காதலின் 
இன்னொரு முகம் 
சின்ன சின்ன முகப்பருக்களாக 
வெளிப்படும்...!!

என் 
காதலின் 
இன்னொரு முகம் 
சின்ன சின்ன சில்மிஷங்களாக  
 வெளிப்படும்..!!