June 15, 2012

போடா...

உங்களை 
எப்படி அழைத்தால் பிடிக்கும்..? 
என திடீரென கேட்டாள்..

அவள் கைரேகை அழகை பார்த்தபடி
"பிரியமாய் நீ போடா..!" என்றாலும் 
மகிழ்ச்சிதான்"என்றேன் 

"அய்யோ...அந்த வார்த்தையை 
ஒரு 
ரகசிய காதல் பொழுதில் 
உன் 
காதில் சொல்ல சேர்த்து வைத்திருக்கிறேன்" என்றாய்..?!

அது எந்த பொழுது..?
என்றதும் 
கை இழுத்து 
முகம் மூடிகொண்டாள்..?! 

No comments:

Post a Comment

கருத்துக்களை பகிரலாமே...