July 17, 2010

தோளாகவே மாறிவிடு...!!

ஒரு நாள் மட்டுமாவது
உன்
நெஞ்சுக்குரியவனாக வேண்டும்...!


அந்நாள்
முத்தத்தில் விடிந்து
முத்தத்தில் முடிந்து போக வேண்டும்...!

தனிமை துரத்தி...
தோளில் சாய்ந்து
தோளாகவே மாறிவிடு...!

பகல் மறந்து...,
பசி மறந்து...,
பழையன மறந்து...
பருவ இலை விரித்து...
போதுமெனும் வரை பரிமாறு...!

இலை துடைத்து உண்பது
இவன் கடமை..!