June 27, 2012

"காதல்" வாசனை

எதற்காக சேர்த்து வைத்திருக்கிறாய்.?
என்று மட்டும் கேட்டு விடாதே...
நீ வீசியெறிந்த
"சாக்லெட்" காகிதங்களில் இருக்கும்
"காதல்"
வாசனை போய் விடும் 

காதலா..!?
**************************************




பார்வைகள் 
நெம்பும்போது ஏன்தான் 
பருவமடைந்தேனோ..?
என சலித்ததுண்டு...,


என்னை பைத்தியமாக்கும்
உன் காதல் கிடைத்தபின் புரிந்தது...
"உனக்கான பரிசாகத்தான்
இத்தனையும்" என்று..!!
******************************************

வாகனம் ஓட்டும்போது
கைபேசி எடுக்காதே..?!
கவனி...


நீ இப்போது தனி ஆளில்லை...
உன்னை நம்பி
நானும்...


காதலும்..!!
****************************************
நீ கேட்காத நேரம் பார்த்து
கொடுக்க வேண்டும்..!! என
சிறுக சிறுக
"முத்தம்" சேர்த்து வைத்திருப்பேன்

ஆசையாய்.....?!


நீயோ..சதா கேட்டு ஏமாற்றமடைய 
செய்வாய்..!!.



முத்தமில்லாமலே
முடிந்து விடும் 

பொழுது.

June 15, 2012

போடா...

உங்களை 
எப்படி அழைத்தால் பிடிக்கும்..? 
என திடீரென கேட்டாள்..

அவள் கைரேகை அழகை பார்த்தபடி
"பிரியமாய் நீ போடா..!" என்றாலும் 
மகிழ்ச்சிதான்"என்றேன் 

"அய்யோ...அந்த வார்த்தையை 
ஒரு 
ரகசிய காதல் பொழுதில் 
உன் 
காதில் சொல்ல சேர்த்து வைத்திருக்கிறேன்" என்றாய்..?!

அது எந்த பொழுது..?
என்றதும் 
கை இழுத்து 
முகம் மூடிகொண்டாள்..?! 

June 11, 2012

அதிசய உணவு




தொடர்ந்து 
தொடாமல் இருந்தால் 
கைபேசி துரு பிடிக்கும்... 
ஒரு குறும்செய்தி அனுப்பலாமே..?

தொடர்ந்து 
மௌனமாய் இருந்தால்
மொழி மறந்து போகும்.. 
கொஞ்சம் பேசு..!!
****************************************
"குளுகோஸ்" குரலே..,
உன்னோடு பேசாத பொழுதுகளின் 
வெறுமையை..,
உன்னுடன் பேசிய முந்தைய 
நினைவுகள் வந்து 
தீனி போடும்...!!

தின்ன தின்ன 
பசியை அதிகரிக்க செய்யும் 
"அதிசய உணவு" 
உன் குரல்..!!

May 8, 2012

ஒரு வெற்று குறும்செய்தி...


என்னை பிரிந்து 
நீ ரயிலேறிய போதுதான் 
தெரிந்தது 
நீ என் உயிரிலேறி விட்டாய் 
என்று..

வெறுமனே வைத்திருக்கும் 
உன் கைபேசியிலிருந்து
ஒரு வெற்று குறும்செய்தி மட்டும் 
அனுப்பி வை..
நானே... 
நிரப்பி கொள்கிறேன் 
எனக்கு உயிர் வழங்கும் 
"காதல் செய்தியை" 
 அதில்..!!


March 19, 2012

ஒரு காதல் பொழுது -3




அவள் முதுகில் "உப்புமூட்டை" ஏறிகொண்ட 
மகள்.. 
"அப்பா உப்பு...உப்பு என்றாள்...?!"

நான் சொன்னேன்
"நீ உப்பு இல்லை சக்கரை கட்டி டா செல்லம்..!"

அவள் கேட்டாள்
"அப்ப நான்..?"

கண்ணடித்து சொன்னேன்
 "நீ சக்கரை மூட்டை..!!"என..
 
அவள் செல்ல கோபத்துடன் 
"நான் மூட்டையா..அவ்வளவு குண்டா நான்?" என 
ஊடல் தொடங்கினாள்.

நான் 
சமாதான படுத்த ஓடினேன் 
"சக்கரை கட்டி" இதை  வேடிக்கை 
பார்த்து சிரித்தது.

February 22, 2012

தேவதை வழிபாடு

முன்போல் ஏன் 

கவிதை அனுப்புவதில்லை...


குறும்செய்திகள் குறைந்து விட்டதே...?


காதல் கரைந்து விட்டதா..?


என்று அடுக்கினாள்.



"தேவதை...



கிடைக்க வேண்டி செய்த 


வழிபாடுகள்தாம்..


என் கவிதைகள்...?!

நீயே  கிடைத்தபிறகு... 


வழிபாடு எதற்கு..? 


என்றேன் 



மணலில் அளாவியபடி...,