September 30, 2010

காதலும் குறுஞ்செய்தியும்-5



பாடல் கேட்கும் வசதி,
இணைய வசதி,
படம் பிடிக்கும் வசதி...என 
எல்லாம் 
என் கைபேசியில் இருந்தும்...,
உனக்கு "குறுஞ்செய்தி" 
அனுப்பும் வசதிதான் 
நான் 
அதிகம் விரும்பி பயன்படுத்துவது..!! 
********************************************
கைபேசி கையில் இருந்தால்...?
உனக்காக ஒரு 
"கவிதை" குறுஞ்செய்தியாக உருவாகி 
கொண்டிருக்கும்..!!
இல்லையென்றால்..., 
"இதயம்" 
உன் நினைவை அசை போடும் 
துடிக்க மறந்து..!!
*****************************************
பேலன்ஸ் இல்லை.., 
அப்பா இருந்தார்..,
படித்துகொண்டு இருந்தேன்.., 
நெட்வர்க் இல்லை..
என 
எனக்கு பதிலாய் 
பல மறுமொழிகள் வைத்திருப்பாய்...
ஆனால் 
 நான் தொடர்ந்து 
உனக்கு "குறுஞ்செய்தி" 
அனுப்புவதற்க்கான ஒரே காரணம்..
நீயென் பிரிய தோழி...!!
***************************************************
உனக்கு அனுப்பிய கவிதைகள் படித்த 
உன் தோழிகள் 
என்னை பார்க்க விருமபுவதாய் 
சொல்லும் 
உனக்கேன் புரிவதில்லை..?
நான் உனக்கு அனுப்பியது 
"கவிதைகள்" அல்ல 
"காதல்" என்று..!! 

September 26, 2010

காதலை.., ஒட்டுமொத்தமாய்....

காதலை..,
ஒட்டுமொத்தமாய் 
ஒரு முத்தத்தில் காட்ட சொன்னால்
முடியாத என் நீண்ட முத்தம்
ஒருவேளை
உன்னை மூச்சு முட்ட செய்தாலும்
ஆச்சரியமில்லை...!!

காதலை...,
ஒட்டுமொத்தமாய்
ஒரு கட்டிபிடித்தலில் காட்ட சொன்னால்..
என் இறுக்கத்தில்
ஒருவேளை நீ
செத்து போனாலும் ஆச்சரியமில்லை..!!

ஆனால் காதலை ஒட்டுமொத்தமாய்
இப்படி
மறக்க சொல்லி கேட்கிறாயே..?
இறக்க சொல்லி இருந்தாலும்
புண்ணியமாய்
போயிருக்கும் உனக்கு...!?

September 14, 2010

ஒ..தலையணையே..!

நீ அவள் போல் இலகு இல்லை...
தள்ளி படு..
தலையணையே..!!
******************************
நீ 
அணைத்த  தலையணைதான் 
மந்திரித்தது என்னை..
ஒ.. 
இதற்கு பெயர்தான்  
தலையணை மந்திரமா?
*******************************
காதல் காலங்களில்..
நொந்து சாவேன் 
தலையணை கண்டு
நான் ..!!

கல்யாண கோலத்திற்கு பிறகு ..
வெந்து சாகும் 
தலையணை...
நம்மை கண்டு..!!
******************************

September 13, 2010

காதலும் குறுஞ்செய்தியும் -3

குறும்பி நீ 
குறுஞ்செய்தி அனுப்புகிறாயா...?
இல்லை...
குறும்பு கனவுகளை அனுப்புகிறாயா...?!
சிலிர்க்கிறது... 
ஒவ்வொரு இரவும்...!!
***********************************************
ரயில் கண்டால்..., 
கையசைக்கும் எல்லா குழந்தைகளும் ...!!
மயிலே  
உன் "எஸ்.எம்.எஸ்" கண்டால் 
என் எல்லா அணுக்களுக்குள்ளும் 
ஒரு குட்டி ரயிலே ஓடும்..!!
*************************************************
"எஸ்.எம்.எஸ்" அனுப்பி 
எழுத்து தேய்ந்த கைபேசிதான் 
நம் 
குழந்தைக்கு விளையாட்டு பொருள் 
இப்பொழுதெல்லாம்...!!

September 8, 2010

காதலும் குறுஞ்செய்தியும்....2

நீ தினமும் 
ஒரு "எஸ்.எம்.எஸ்" 
மட்டுமே அனுப்பினாலும்..
நீயெனக்கு 
"பொன் முட்டையிடும் வாத்துதான்..!!"
**************************************************
கனி பேசியே...
உன் "கைபேசியை" நான் 
எடுத்து பார்ப்பது... 
உன்னை 
சந்தேகப்பட்டு அல்ல..
நாளெல்லாம் 
படுக்கையிலும்,பக்கத்திலும் 
இருப்பதால் 
மெலிகிறதா....என்று 
பரிசோதிக்கவே..?!
தூரத்தில் இருக்கும் நான் மட்டும் 
எப்படி..?
************************************************** 
மனசு போல மாற்றி விட்டாய் 
உன் "சிம் கார்டையும்"...
என்றைகேனும் வந்து சேரும்  
என் "பிரிய எஸ்.எம்.எஸ்" 
அனைத்தும்
நீ 
"சிம்"  இடும் போது.....?!




September 4, 2010

காதலும் கைபேசியும்..

எப்போதும் 
என் குறுஞ்செய்திகளின் குலதெய்வம் 
நீதானடி..
அனுப்பிய அனைத்தும் ஒன்றுகூடி 
உனக்காக "தேர்" இழுத்தாலும் 
ஆச்சர்யமில்லை..!! 
********************************************
"இனிய இரவு" என்று தினமும் 
குறும்செய்தி அனுப்புகிறாய் அப்பாவி போல...
இனியவள் நீயில்லாத 
இரவு எப்படி 
"இனிய இரவாக" முடியும்..?
*******************************************
ரகசியம் இதுதான்...
என் கைபேசிக்கு 
எஸ்.எம்.எஸ் பூஸ்டர்....  
என் கைபேசியில் இருக்கும் 
உன் புகைப்படம் மட்டுமே 
என் பூஸ்டர்...!!
******************************************
நீ...
என் கைபேசி 
எண்ணைகூட அழித்து விட்டாய்...!!

உன் "போடா" என்ற 
ஒரு வார்த்தை "எஸ்.எம்.எஸ்"கூட 
அப்படியே இருக்கிறது 
கைபேசியை அழகாக்கி...
கண்ணில் ஈரமாக்கி...!!
*******************************************
அழகி...
நீயும் என் காதலுக்கு 
சைலன்ட் மோடு...!!
அதிரும்...
உன் கைபேசியும் 
என் குறுஞ்செய்திக்கு 
சைலன்ட் மோடு..!!
******************************************


September 2, 2010

திரும்பி பார்க்க வைக்கும் அழகு நீ..

யாரையும் திரும்பி பார்க்க வைக்கும்
அழகு நீ..
யாரையும் திரும்பி பார்க்கா
அழகு நீ....!!

நீ
திரும்பி பார்த்தால்
அதிர்ஷ்டம்தான்..!!

நீ
திரும்பி பார்த்தால்
அதிர்ஷ்டமும்
திரும்பி பார்க்கும்
இவனை..!