August 24, 2011

கவிதையின் கவிதைகள்..

எதற்காக சேர்த்து வைத்திருக்கிறாய்.?
என்று மட்டும் கேட்டு விடாதே...
நீ வீசியெறிந்த
"சாக்லெட்" காகிதங்களில் இருக்கும்
"காதல்"
வாசனை போய் விடும் 

காதலா..!?
**********************************************
பார்வைகள் நெம்பும்போது
ஏன்தான் பருவமடைந்தேனோ..?
என சலித்ததுண்டு...,
என்னை பைத்தியமாக்கும்
உன் காதல் கிடைத்தபின் புரிந்தது...
"உனக்கான பரிசாகத்தான்
இத்தனையும்" என்று..!!
******************************************
வாகனம் ஓட்டும்போது
கைபேசி எடுக்காதே..?!
கவனி...நீ இப்போது தனி ஆளில்லை...
உன்னை நம்பி
நானும்...காதலும்..!!
****************************************
நீ கேட்காத நேரம் பார்த்து
கொடுக்க வேண்டும்..!! என
சிறுக சிறுக
"முத்தம்" சேர்த்து வைத்திருப்பேன்
ஆசையாய்.....?!
நீயோ..சதா கேட்டு ஏமாற்றமடைய 

செய்வாய்..!!.

முத்தமில்லாமலே
முடிந்து விடும் 

பொழுது.

August 20, 2011

அழகுதோஷம் நீ..!!



மறந்து விட்டாயா..? என  
கேட்பதற்கு பதில்..
மறித்து விட்டாயா..? என்று 
கேட்டிருக்கலாம் நீ....., 

உன்னை 
மறக்க செய்யும் 
எல்லா 
கேளிக்கைகளையும் 
மறுத்து வந்திருக்கிறேன் 
தொடர்ந்து..

ஏனென்றால் 
உன்னை மறப்பதென்பது 
முழுமையாய் 
இறப்பதற்கு சமானம்..!!

கண்கள் சலிக்காத ஒரே ஓவியம் 
நீ -என் 
உயிர் பதித்துக்கொண்ட ஒரே உலகம் 
நீ...!!

எத்தனை பெரிய மறதிக்காரனுக்கும் 
விதிவிலக்கு நீ..
எத்தனை பெரிய மருத்துவனுக்கும் பிடித்து போகும் 
அழகுதோஷம் நீ..!!

பெண்ணினத்தில்....
அழகு ஜென்மம் நீ...!!
ஆண்ணினத்தின்...
பல ஜென்ம கனவு நீ..!!

நமக்கு பின் 
காதலிக்க தொடங்கியவன் 
கைகுழந்தையோடு குல தெய்வ கோவிலுக்கும் 
போய் விட்டான்....,
இன்னும் 
நம் காதலில் 
நான் 
வெறும் பார்வையாளனாக மட்டும்...!! 

August 9, 2011

காதல் மலடி

ஒரு 
காதல்கூட
பெற முடியாத
காதல் மலடி
என் கவிதைகள்..!!

உனக்கெழுதிய
கவிதைகளை
இன்று
ஊரே
காதலிக்கிறது..!!

நீ கடைசியாய்
அழ வைத்து சென்ற
பூங்கா இருக்கையில்..
இன்று
வேறு காதலர்கள் சிரித்தபடி...?!

என் 
இரவுகளை 

நரகமாக்க
எங்கிருந்தோ....
எப்படியோ....
கண்ணில்பட வைத்துவிடுகிறாய்
பெண்ணொருத்தியை
உன் சாயலில்...!!

உனக்கு
சொர்க்கம்தான் சந்தேகமில்லை...
நரக த்தைதான்....
இங்கே கொடுத்து போயிருக்கிறாயே...??!