February 24, 2011

ஒரு ஊரே காதலிக்க ஏங்குகிறது....


அவள் மேடை ஏறி பேசியதில்லை..
ஆனால் 
பேச தொடங்கினால் 
ஜனம் மொத்தமும் வாயடைத்து கேட்கும்...!!

அவள் தன்னைத்தான் "அழகில்லை" என்பாள்...
ஆனால் 
"அழகிகள் என தம்பட்டம் அடிப்பவர்களேல்லாம் 
அவளை திரும்பி பார்ப்பார்கள்..!!

அவளுக்கு "கவிதை" பிடிக்காது...
ஆனால் 
எல்லா கவிதைக்கும் 
அவளை பிடிக்கும்..!!

அவள் யாரையும் காதலிப்பதில்லை...
ஆனால் 
ஒரு ஊரே 
அவள் காதலிக்க ஏங்குகிறது 
என்னோடு சேர்த்து..!!

அவள் பெயரை..., 
என் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்..
காத்திருங்கள்...
அவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்..
ஒரு "விருந்தே உண்டு" 
எல்லாருக்கும்..!! 

February 23, 2011

நீதான் வேண்டும்" என் குறும்செய்திக்கு பதிலாக..





நீ 
அனுப்புவது 
என் 
குறும்செய்திக்கு 
"பதில்....?!"
  
எனக்கோ 
"நீதான் வேண்டும்" 
என் 
குறும்செய்திக்கு பதிலாக..!!
*****************************************
நீ 
திட்டி அனுப்பிய 
குறும்செய்திகளை கைபேசியில் 
பார்த்து...
"இதை ஏன் அழிக்கவில்லை..?" 
என்றாய்.

"தயவு செய்து அழித்துவிடாதே  
 என்மீது 
நீ எடுத்துகொள்ளும் 
அதீத உரிமையின் அடையாளம்தான் 
அது..!?" என்றதும்..
"போடா" என அழ தொடங்கினாய் 
புன்னகைத்தபடி..!! 
****************************************
பார்க்க வருவதற்குள்... 
"எங்கே இருக்கிறாய்..?
எங்கே இருக்கிறாய்..?
என 
நூறு முறை குறும்செய்தி 
அனுப்பி விடுவாய்...

நானோ 
பதிலே அனுப்பாமல் 
நேரில் வந்து காதில் கிசுகிசுப்பேன் 
"எப்போதும் 
உன் 
இதயத்தில்தான் சுகமாய் இருக்கிறேன்..!!" 
என கண்ணடித்து.


February 19, 2011

அழகுயர பூ......

நெரிசல் மிகுந்த சாலை
அவள் வீடு இருக்கும் 
தெரு...!!

நெரிசலில் 
"காதல் வாழ்த்து அட்டைகள்"
ஆண்கள் கண்ட ஒரே 
"அழகி" நீயோ..?

என் காதல் திறக்க 
நல்ல நேரம் பார்த்திருக்கும் 
என் நிலையோ...
நெருக்கடியில்....மிகுந்த 
நெருக்கடியில்...?!
******************************************
உனக்கு 
"பூ" வாங்க 
பூக்கடைக்கு சென்று விட்டேன் 
தெரியாத்தனமாக...
அதற்காக இப்படியா 
உன் 
"சாதிஜன பூக்களெல்லாம்" 
என்னை 
கிண்டல் செய்வது...?
'அழகுயர பூவிற்கு..,' 
'முழம் பூ...' 
வாங்க வந்துவிட்டான் 
கிறுக்கன்...!!" என..