January 4, 2011

புது டைரியாக" என்னை கொடுக்கிறேன்.....






"புது டைரியாக" 

என்னை கொடுக்கிறேன் 

உன்னிடம்...

கவிதை எழுது....
கணக்கு குறி..
முக்கிய நிகழ்வுகளை 
பதிவு செய்...

ஆனால் 
முடித்து மூடி மட்டும் விடாதே..!!
*************************

பெரும்பாலும் 
நான் அனுப்பும் குறும்செய்திகளுக்கு.. 
நீ பதிலே அனுப்புவது இல்லை...
ஆனால்
பதிலே அனுப்பாத உனக்குத்தான் 
பெரும்பாலும் 
நான் அதிகம் குறும்செய்தி 
அனுப்பி வருகிறேன் 
பிரியமாய்...?!!
*************************
குளித்த தலைமுடியின் ஈரம், 
நடைபோடும் 
உன் பின்புறத்தில் 'புள்ளி வைக்கிறது'...

இதை 
கண்கொட்டாமல் பார்த்திருக்கும் 
காளையர் நெஞ்செல்லாம் கோலம் போடுகிறது...!