May 20, 2010

ஒவ்வொரு நாளும் ஒரு விசேஷ நாள்தான்...

உண்மையை சொல்வதானால்...
உன்னை எல்லா பொழுதும் 

நினைப்பதில்லைதான்...
குறிப்பாக கவிதை எழுதும் 
நேரங்களில்...

ஆனால் எழுதும் கவிதை
உன்னை பற்றியதாய் தான்
இருக்கும்..!!
****************************************
******
என்னிடம் அப்படி என்ன விசேஷம்..? 
என்று
எப்போதும் கேட்கிறாய் நீ...
அதெல்லாம்
தெளிவாக சொல்ல தெரியாது
ஆனால்
உன்னை சந்திக்கும்
ஒவ்வொரு நாளும்
ஒரு விசேஷ நாள்தான்...தோழி..!!
***********************************************
பொழுது போக்க உனக்காக
நான்
பல கலைகள் கற்று வைத்திருக்கிறேன்...


பொழுதுபோக்க எனக்காக
நீ
பல "அழகு" வளர்த்து வைத்திருக்கிறாய்..!

May 19, 2010

உலக ருசியான நீர்...

எப்போதும் கண்ணாடி முன் தன்னை
அலங்காரம் செய்து கொள்ளும்
"தாவணி பெண்" போல
எப்போதும் உன்னை மட்டுமே எழுதி
அலங்காரம் செய்து கொள்கின்றன
"என் கவிதைகள்"...!!
****************************************************
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்-என்
ஒரு கவிதையை நீ படி போதும் அது
சொல்லிவிடும்
என் மொத்த காதலையும்,,,..
*****************************************************
உலக ருசியான நீரில் இரண்டாம் இடம்
சிறுவாணிக்கு தானாம்..
"என்னை கேட்டிருந்தால் நான் சொல்வேன்..!!"என
உன்னை பார்த்தேன்...,
கைகொண்டு தன் உதடு மறைத்தாள்..!!
******************************************************
உறங்கபோகும் முன்
நீ உடுத்தும் இரவு உடை...
நீ உடுத்தியதும்
உறக்கம் கலைகிறது...!!

May 7, 2010

இவ்வளவு தூரம் உங்களை இம்சித்தவள் யார்..?

நீ போய் விட்டாய்....
இனி 
யாராவது வழியில் உலக அழகாய்
வந்தாலும் அசைக்க முடியாது
என் இதயத்தை...?


என் கவிதைகளை படித்து 
இவ்வளவு தூரம் உங்களை 
இம்சித்தவள் யார்..?என்று
எவளாவது கேட்பாள்...!! 

பதிலுக்கு நான்
நீயென்னை மறந்து விட சொன்னபோது
ஒரு 'வெற்று புன்னகையை'
உனக்கு பதிலாக அளித்தேனே
அதையே 

அவளுக்கும் பதிலாக கொடுப்பேன்..!