March 19, 2012

ஒரு காதல் பொழுது -3




அவள் முதுகில் "உப்புமூட்டை" ஏறிகொண்ட 
மகள்.. 
"அப்பா உப்பு...உப்பு என்றாள்...?!"

நான் சொன்னேன்
"நீ உப்பு இல்லை சக்கரை கட்டி டா செல்லம்..!"

அவள் கேட்டாள்
"அப்ப நான்..?"

கண்ணடித்து சொன்னேன்
 "நீ சக்கரை மூட்டை..!!"என..
 
அவள் செல்ல கோபத்துடன் 
"நான் மூட்டையா..அவ்வளவு குண்டா நான்?" என 
ஊடல் தொடங்கினாள்.

நான் 
சமாதான படுத்த ஓடினேன் 
"சக்கரை கட்டி" இதை  வேடிக்கை 
பார்த்து சிரித்தது.