August 9, 2011

காதல் மலடி

ஒரு 
காதல்கூட
பெற முடியாத
காதல் மலடி
என் கவிதைகள்..!!

உனக்கெழுதிய
கவிதைகளை
இன்று
ஊரே
காதலிக்கிறது..!!

நீ கடைசியாய்
அழ வைத்து சென்ற
பூங்கா இருக்கையில்..
இன்று
வேறு காதலர்கள் சிரித்தபடி...?!

என் 
இரவுகளை 

நரகமாக்க
எங்கிருந்தோ....
எப்படியோ....
கண்ணில்பட வைத்துவிடுகிறாய்
பெண்ணொருத்தியை
உன் சாயலில்...!!

உனக்கு
சொர்க்கம்தான் சந்தேகமில்லை...
நரக த்தைதான்....
இங்கே கொடுத்து போயிருக்கிறாயே...??!

6 comments:

  1. காதல் வலி மிகுந்த கவிதை....

    ReplyDelete
  2. ///////
    என் இரவுகளை
    நரகாக்க....
    எங்கிருந்தோ....
    எப்படியோ....
    ..//////

    இதில் ஏதோ குறையுது பாருங்கள் நண்பரே...

    ReplyDelete
  3. என் இரவுகளை
    நரகமாக்க
    எங்கிருந்தோ....
    எப்படியோ....
    கண்ணில்பட வைத்துவிடுகிறாய்
    பெண்ணொருத்தியை
    உன் சாயலில்...!!
    Great lines dude.........

    ReplyDelete
  4. காதல் மலடியை காதலிப்பதில் என்ன சுகம் ?

    ReplyDelete
  5. hey........touching ya.....

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...