August 24, 2011

கவிதையின் கவிதைகள்..

எதற்காக சேர்த்து வைத்திருக்கிறாய்.?
என்று மட்டும் கேட்டு விடாதே...
நீ வீசியெறிந்த
"சாக்லெட்" காகிதங்களில் இருக்கும்
"காதல்"
வாசனை போய் விடும் 

காதலா..!?
**********************************************
பார்வைகள் நெம்பும்போது
ஏன்தான் பருவமடைந்தேனோ..?
என சலித்ததுண்டு...,
என்னை பைத்தியமாக்கும்
உன் காதல் கிடைத்தபின் புரிந்தது...
"உனக்கான பரிசாகத்தான்
இத்தனையும்" என்று..!!
******************************************
வாகனம் ஓட்டும்போது
கைபேசி எடுக்காதே..?!
கவனி...நீ இப்போது தனி ஆளில்லை...
உன்னை நம்பி
நானும்...காதலும்..!!
****************************************
நீ கேட்காத நேரம் பார்த்து
கொடுக்க வேண்டும்..!! என
சிறுக சிறுக
"முத்தம்" சேர்த்து வைத்திருப்பேன்
ஆசையாய்.....?!
நீயோ..சதா கேட்டு ஏமாற்றமடைய 

செய்வாய்..!!.

முத்தமில்லாமலே
முடிந்து விடும் 

பொழுது.

1 comment:

கருத்துக்களை பகிரலாமே...