February 24, 2011

ஒரு ஊரே காதலிக்க ஏங்குகிறது....


அவள் மேடை ஏறி பேசியதில்லை..
ஆனால் 
பேச தொடங்கினால் 
ஜனம் மொத்தமும் வாயடைத்து கேட்கும்...!!

அவள் தன்னைத்தான் "அழகில்லை" என்பாள்...
ஆனால் 
"அழகிகள் என தம்பட்டம் அடிப்பவர்களேல்லாம் 
அவளை திரும்பி பார்ப்பார்கள்..!!

அவளுக்கு "கவிதை" பிடிக்காது...
ஆனால் 
எல்லா கவிதைக்கும் 
அவளை பிடிக்கும்..!!

அவள் யாரையும் காதலிப்பதில்லை...
ஆனால் 
ஒரு ஊரே 
அவள் காதலிக்க ஏங்குகிறது 
என்னோடு சேர்த்து..!!

அவள் பெயரை..., 
என் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்..
காத்திருங்கள்...
அவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்..
ஒரு "விருந்தே உண்டு" 
எல்லாருக்கும்..!! 

6 comments:

  1. கவித..கவித... இல்ல..இல்ல.. காதல்..காதல்..

    ReplyDelete
  2. உங்கள் கவிதைகள் எப்பவும் என்னை காதலி காதலி என நச்சரிக்கின்றன சதீஷ்
    --

    ReplyDelete
  3. கவிதை மழையில் நனைந்தேன் உனது வரிகளின் வழியே...

    கவிதையாகி காதலிலே கனிந்துருகி...ஆஹா.. கவிதை அருவி மாதிரி கொட்டுது...

    ReplyDelete
  4. Hi Sathish,
    Romba alaha aalama iruku unga kavithaigal..
    Vaalthukkal!!

    ReplyDelete
  5. Nandri yaadhavan,alamelu,sowmya..logu

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...