November 17, 2010

கொஞ்சூண்டு கொடு...

ஓயாமல் 
உன்னை பற்றி 
பேசிகொண்டே இருக்கும் 
என் வாயாடி மனம்...

ஓயாமல் 
நீ சரி செய்தும் 
எட்டி பார்க்கும் 
உன் "பேரழகுகள்" மட்டுமே 
என் வாயடைக்கும்..!!
**********************************
கஞ்சத்தனத்துக்கு இன்னொரு பெயர் 
நீ..
கைபேசியில் பேசும் 
ஓரிரு நிமிடங்களை போலத்தான்...
கனவிலும் வந்துவிட்டு 
ஓடி போகிறாய்..!! 
*************************************
கடவுள் எத்தனை கருணையானவர்...?
உனக்கு இத்தனை 
அழகுகளை 
அள்ளி தந்திருக்கிறார்..!!

நீயும்கூட 
ஓர் தேவதைதானே தானே..?
எனக்கு 
காதலை அள்ளி தராவிட்டாலும்...
கொஞ்சூண்டு கொடுக்கலாமே 
நீ..!! 
*************************************
என் கவிதைகளை படிக்கும் 
நண்பர்கள்,
உன்னை பற்றி விசாரிக்கிறார்கள்...
உன் சம்மதத்திற்காக காத்திருக்கும் 
என்னைபோல 
அவர்களையும் காத்திருக்க 
சொல்லி விட்டேன்..!!

5 comments:

கருத்துக்களை பகிரலாமே...