November 25, 2010

நீ என் உயிரிலேறி விட்டாய்

உன்னை பிரிந்து 
ரயிலேறும் போதுதான் 
எனக்கு புரிந்தது...
நீ என் 
உயிரிலேறி விட்டாய் என்று..!!
என் 
இதய சுவற்றிலெல்லாம் 
உன் பெயரைத்தான் 
கிறுக்கி வைத்திருக்கின்றன 
உன் 
ஞாபக விக்கல்கள்..!!
****************************************************
அனுப்பிய அடுத்த நொடி 
உன்னிடம் வந்து சேரும் 
இந்த 
"எஸ்.எம்.எஸ்" போல...
என்னையும் 
அனுப்ப முடிந்தால் 
சுகபடுவேன் ஜீவனெல்லாம்..!!
******************************************************
வழக்கமாய் 
குடிக்கும் நேரத்தில் குடிக்கா விட்டால்
கை நடுங்கும் 
குடிகாரன்போல...
வழக்கமாய் 
நீ அழைக்கும் நேரத்தில் 
உன் அழைப்பு வரா விட்டால்
நடுங்கும் என் உயிரெல்லாம் 
பெரும் குடிகாரன்போல..!!
******************************************************
நான் 
நோய் பட்ட காலங்களில்...
உன் பெயரின் 
உச்சரிப்பே... 
என் மருந்தாகும்...!!

நீ 
நோய் பட்ட காலங்களில்...
உன் பெயரில் 
அர்ச்சனையே.... 
என் கோவில்களில்...!!

No comments:

Post a Comment

கருத்துக்களை பகிரலாமே...