October 2, 2009

சக்கரை சுமக்கும் சிற்றெறும்பு..

நீ 
நேரில் வர வேண்டாம்..!
நெஞ்சுருக...
நேசம் கூட 

தர வேண்டாம்....!
ஒரே ஒரு வார்த்தை உதிர்ப்பாயா..
என் உயிர் 

சுகப்படும்...?
சொல்வாயா..... 

"நேசிக்கிறேன்" என்று மட்டும் ??


அது போதும் எனக்கு...


'சக்கரை சுமக்கும் சிற்றெறும்பு' போல
சந்தோசமாய்
உன் பெயரை ஆளில்லாத

உயர்ந்த மலையில் 
உரக்க சொல்லி
உயிர் முடிப்பேன்...

நன்றியோடு..?

1 comment:

  1. உன்
    அன்பின் கதகதப்பும்,
    வலிக்காத தண்டனைகளும்..,
    இனி
    யாராலும் தர முடியாது..

    கட்டெறும்பு கடித்த போதும் .,
    காதல் போன போதும்..,
    "அம்மா"
    என்று சொல்லி
    ஆறுதல் அடைந்தேன்..??


    "True quotes'

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...