December 17, 2011

ஒரு காதல் பொழுது -2


"அப்பா...
உன் கவிதை வர்ணனையில் இருப்பது அம்மாவா..?"

"ஆமா...தங்கம்..!!" 

"ஆனா...அந்த அளவிற்கு அழகா இல்லையே அம்மா...
பொய் தானே அதெல்லாம்..?"

"இல்லையே எல்லாம் உண்மை...?!"

"எப்படிப்பா..?"

"ம்ம்ம்...உனக்கு ஒரு காரியம் ஆக யார்கிட்ட போய் கேட்பாய்..?"

"அம்மாகிட்ட..!!"

"குட்...அம்மா யார்கிட்ட கேட்பாங்க..?"

"உங்ககிட்ட..?!!"

"அதுமாதிரிதான் இதுவும்...எனக்கு "காதல்" ஆக 
கவிதை வழியாக...சொன்னேன்...
கவிதை...எனக்கு உங்க அம்மாவை கொடுத்துச்சு..?!
உனக்கு சைக்கிள் கிடைச்சதும் 
அம்மாவை எப்படி "நல்ல அம்மா" அப்பிடின்னு சொன்னியோ...
அதுமாதிரிதான் என் கவிதை வர்ணனைகளும்..!!
புரிஞ்சுதா...செல்லம்..?"

அவன் உடனே 
சமையல் அறை ஓடி...
"என் செல்ல பூஸ்ட்டே அம்மா...!?" என்று சொல்லி சிரித்தான்.

அவள் கண்ணுருட்டி... 
"என் செல்ல பூஸ்ட்டே புஜ்ஜி...!? என்றாள். 

நானும் சேர்ந்துகொண்டேன்..
"என் செல்ல பூஸ்ட் குட்டிகளா..!?!"
என...

1 comment:

கருத்துக்களை பகிரலாமே...