May 24, 2011

காதல் & காமம்

காதல் "செந்தாமரை..".
காமம் "சகதி குளம்.."
காதலுக்கு உரமாகும் 
காமம்...!!

காதல் வைரம்...
காமம் கரி..
கரி உருமாறி...
காதல் வைரமாகும்...!!

காதல் பலாச்சுளை...
காமம் முள்...
காமம் கடந்தால் 
காதல் சுளை ருசிக்கலாம்....!!
********************************************
குணபடுத்த முடியாத நோயின் வலியிலிருந்து தப்பிக்க 
"கருணை கொலை" அரசால் 
கொண்டு வரப்பட்டது..

உன் 
பிரிவின் வலியும் அப்பிடிதான்... 
நீயே என்னை 
"கருணை கொலையும்" செய்துவிடு
 தயவு செய்து...!!
ஏனெனில் 
நான் இறக்கும் முன் பார்த்த கடைசி முகம் 
உன் 
முகம்மாய்தான் இருக்கும்...!!


No comments:

Post a Comment

கருத்துக்களை பகிரலாமே...