May 9, 2011

உன் "கைபேசி எண்" என்ன..?



உன் மனக்கதவை திறக்கும்
குறும்செய்தி...
எந்த குறும்செய்தியோ..?

உன் வெட்கம் உடைக்கும்
ஸ்பரிசம்
எந்த ஸ்பரிசமோ..?
*************************************
இனி எப்போது அழைப்பாய்
இனிப்பே...?
உன் அழைப்பு வந்தால்
என்னோடு சேர்த்து......
என் கவிதைகளும் பிழைத்துக்கொள்ளும்..!!
***********************************
சிறு வயது கதையில்...
நாளெல்லாம் குதித்து ஓய்ந்து
நரி
இப்படி சொல்லி போனது...
"சீ..இந்த பழம் புளிக்கும் என்று...?!"
ஆனால் ஆயுள் முழுவதும் முயற்சித்தும்,
நீ காதல் மறுத்தாலும்..,
இப்படிதான் சொல்வேன்..
"ஆஹா..
இந்த பழம் எப்போதும்
இனிக்கும்..!!"என்று.
***********************************
உலக ஆண்கள் மனதில்
ஓடும் ஒரே ஒரு கேள்வி...
உன்
"கைபேசி எண்" என்ன..?
என்பதுதான்.

நீ எப்போதுமே
அழைக்க போவதில்லை..
இருந்தாலும் வாங்கிய
புது கைபேசியில் கூட
"நெட்வொர்க் குறை" இருக்குமோ..? என
சலன படுகிறது உன்னிடம்
சறுக்கிய மனசு..!!

No comments:

Post a Comment

கருத்துக்களை பகிரலாமே...