May 20, 2010

ஒவ்வொரு நாளும் ஒரு விசேஷ நாள்தான்...

உண்மையை சொல்வதானால்...
உன்னை எல்லா பொழுதும் 

நினைப்பதில்லைதான்...
குறிப்பாக கவிதை எழுதும் 
நேரங்களில்...

ஆனால் எழுதும் கவிதை
உன்னை பற்றியதாய் தான்
இருக்கும்..!!
****************************************
******
என்னிடம் அப்படி என்ன விசேஷம்..? 
என்று
எப்போதும் கேட்கிறாய் நீ...
அதெல்லாம்
தெளிவாக சொல்ல தெரியாது
ஆனால்
உன்னை சந்திக்கும்
ஒவ்வொரு நாளும்
ஒரு விசேஷ நாள்தான்...தோழி..!!
***********************************************
பொழுது போக்க உனக்காக
நான்
பல கலைகள் கற்று வைத்திருக்கிறேன்...


பொழுதுபோக்க எனக்காக
நீ
பல "அழகு" வளர்த்து வைத்திருக்கிறாய்..!

2 comments:

  1. இந்த ரெண்டாவது கவிதை முன்னாடியே வாசித்த மாதிரி இருக்குதே. இப்போ யாருக்காக ரிபீட்டு

    ReplyDelete
  2. அருமை வாழ்த்துகள்

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...