May 19, 2010

உலக ருசியான நீர்...

எப்போதும் கண்ணாடி முன் தன்னை
அலங்காரம் செய்து கொள்ளும்
"தாவணி பெண்" போல
எப்போதும் உன்னை மட்டுமே எழுதி
அலங்காரம் செய்து கொள்கின்றன
"என் கவிதைகள்"...!!
****************************************************
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்-என்
ஒரு கவிதையை நீ படி போதும் அது
சொல்லிவிடும்
என் மொத்த காதலையும்,,,..
*****************************************************
உலக ருசியான நீரில் இரண்டாம் இடம்
சிறுவாணிக்கு தானாம்..
"என்னை கேட்டிருந்தால் நான் சொல்வேன்..!!"என
உன்னை பார்த்தேன்...,
கைகொண்டு தன் உதடு மறைத்தாள்..!!
******************************************************
உறங்கபோகும் முன்
நீ உடுத்தும் இரவு உடை...
நீ உடுத்தியதும்
உறக்கம் கலைகிறது...!!

1 comment:

கருத்துக்களை பகிரலாமே...