March 16, 2010

காதல் மை.....



யாராவது 
என் வயதை கேட்டால்....
உன்னை சந்தித்த நாளில் இருந்து 
வயதை சொல்லுவேன்...
ஏனென்றால் அன்றிலிருந்துதான் 
என் வாழ்க்கை திருவிழாவாக மாறியது..!!
*********************************
நீ பிடிக்கும் பேனாவில் 
எப்போதும் மை வழிவதாக புலம்புகிறாய்..
உன்னை பார்க்கும் எல்லாருமே வழியும்போது....
உன் பேனா மட்டும் என்ன விதிவிலக்கா..?
*********************************
சிரித்துகொண்டே முடியாது என்று சொல்லவும்....
அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டு 
ஆகாயம் வரை  புளுகவும்....
'காதல்' உள்ளுக்குள் இருந்தும் 
'கத்திரிக்காய்' விலை உயர்ந்துவிட்டதாய் 
கதை பேசவும்  
உன்னால் மட்டும்தான் முடியுமடி...!!
***********************************
நீ எடுத்துகொண்டு திருப்பி தராமல் 
வைத்துகொண்ட என் இதயத்தை போல...
நானும் ஒருவேளை எடுத்துகொண்டால் 
திருப்பி தரமாட்டேன் 
உன் இதழை...!!
**********************************
ஞாயிற்று கிழமைகளுக்கு நன்றி....
உன்னை 
எந்த தடங்கலுமின்றி நினைக்கலாம்..!! 

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. //நீ பிடிக்கும் பேனாவில்
    எப்போதும் மை வழிவதாக புலம்புகிறாய்..
    உன்னை பார்க்கும் எல்லாருமே வழியும்போது....
    உன் பேனா மட்டும் என்ன விதிவிலக்கா..?
    *********************************//

    சுப்பர்... வாழ்த்துக்கள்

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...