February 14, 2010

கை பேசியா..? காதல் பேசியா..?!


நீ பேசி வைத்த பின்னும்
என்னோடு பேசிக்கொண்டிருந்தது யார்...?
துரத்தும் உன் ஞாபக
தூறலோ..?
**********************************
கைபேசி திரையில்
உன்
எண் ஒளிர்ந்ததும்....
இளையராஜாவின்
இன்னிசை ஒலிக்கிறது
இந்த உயிருக்குள்...?!
**********************************
உனக்கு
குறுஞ்செய்தி அனுப்புவது
குறைந்துபோன காரணம் இதுதான்...
உனக்கு அனுப்பும்
குறுஞ்செய்திகள் அதிகரிக்க அதிகரிக்க...
என் உயிர் இளைத்துகொண்டே வருகிறது...?!
***********************************
உனக்கு எத்தனை செல்ல பெயரிட்டு
மாற்றி பதிவு செய்து வைத்தாலும்...
கண்டு பிடித்து விடுகிறாள்
என் குறும்புக்கார தங்கை...?!
********************************
இரவில் போர்வைக்குள் இருந்து
நீ அனுப்பும்
குறுஞ்செய்திகளின் பிரிய நிறத்தை..
பகலில் படிப்பவர்களால்
புரிந்துகொள்ள முடியாது...?!
********************************
தொடர்ந்து 
அழைப்பு விட்டும்
எடுக்காத நேரங்களில்...
"பூ கட்டி கொண்டு இருப்பேன்" 
என்றாய்..?!

தொடர்ந்து 
ஒரு வார அழைப்பு விட்டும்
எடுக்காமல்...
கடைசியில் யாருடனோ
தாலி கட்டிக்கொண்டு 
வந்தது ஏன்..?

2 comments:

  1. வாவ்..
    /உனக்கு எத்தனை செல்ல பெயரிட்டு
    மாற்றி பதிவு செய்து வைத்தாலும்...
    கண்டு பிடித்து விடுகிறாள்
    என் குறும்புக்கார தங்கை...?!/

    /இரவில் போர்வைக்குள் இருந்து/

    /பூ கட்டி கொண்டு இருப்பேன்"/

    அது எப்படி உலகம் முழுக்க ஒரே மாதிரி இருக்கு!

    ReplyDelete
  2. நீ பேசி வைத்த பின்னும்
    என்னோடு பேசிக்கொண்டிருந்தது யார்...?
    துரத்தும் உன் ஞாபக
    தூறலோ..?
    supper

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...