May 7, 2010

இவ்வளவு தூரம் உங்களை இம்சித்தவள் யார்..?

நீ போய் விட்டாய்....
இனி 
யாராவது வழியில் உலக அழகாய்
வந்தாலும் அசைக்க முடியாது
என் இதயத்தை...?


என் கவிதைகளை படித்து 
இவ்வளவு தூரம் உங்களை 
இம்சித்தவள் யார்..?என்று
எவளாவது கேட்பாள்...!! 

பதிலுக்கு நான்
நீயென்னை மறந்து விட சொன்னபோது
ஒரு 'வெற்று புன்னகையை'
உனக்கு பதிலாக அளித்தேனே
அதையே 

அவளுக்கும் பதிலாக கொடுப்பேன்..!

April 11, 2010

உன்னை பார்க்கும் எல்லாருமே வழியும்போது....

நீ தமிழ் பாடத்தின்
செய்யுள் பகுதி...
உன் அழகெல்லாம் எனக்கு
மனப்பட பகுதி..!!

**********************
முத்தம் மறுக்க...
தூரத்தில் பறக்கும் குருவி கூட
அவளுக்கு
ஒரு சாக்காக அமையும்..?!

************************
நீ பிடிக்கும் பேனாவில்
எப்போதும் மை வழிவதாக புலம்புகிறாய்..
உன்னை பார்க்கும் எல்லாருமே வழியும்போது....
உன் பேனா மட்டும் என்ன விதிவிலக்கா..?

************************
ஞாயிற்று கிழமைகளுக்கு நன்றி....
உன்னை
எந்த தடங்கலுமின்றி நினைக்கலாம்..!! 

**************************
இரக்கமில்லாத
காதலிக்காக வேண்டி
காத்திருக்கும் ஆண்கள் எண்ணி
பார்த்து பொழுது போக்கத்தான்
நிலவும் நட்சத்திரமும் கடவுளால்
படைக்கப்பட்டன..?!

March 16, 2010

காதல் மை.....



யாராவது 
என் வயதை கேட்டால்....
உன்னை சந்தித்த நாளில் இருந்து 
வயதை சொல்லுவேன்...
ஏனென்றால் அன்றிலிருந்துதான் 
என் வாழ்க்கை திருவிழாவாக மாறியது..!!
*********************************
நீ பிடிக்கும் பேனாவில் 
எப்போதும் மை வழிவதாக புலம்புகிறாய்..
உன்னை பார்க்கும் எல்லாருமே வழியும்போது....
உன் பேனா மட்டும் என்ன விதிவிலக்கா..?
*********************************
சிரித்துகொண்டே முடியாது என்று சொல்லவும்....
அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டு 
ஆகாயம் வரை  புளுகவும்....
'காதல்' உள்ளுக்குள் இருந்தும் 
'கத்திரிக்காய்' விலை உயர்ந்துவிட்டதாய் 
கதை பேசவும்  
உன்னால் மட்டும்தான் முடியுமடி...!!
***********************************
நீ எடுத்துகொண்டு திருப்பி தராமல் 
வைத்துகொண்ட என் இதயத்தை போல...
நானும் ஒருவேளை எடுத்துகொண்டால் 
திருப்பி தரமாட்டேன் 
உன் இதழை...!!
**********************************
ஞாயிற்று கிழமைகளுக்கு நன்றி....
உன்னை 
எந்த தடங்கலுமின்றி நினைக்கலாம்..!!