December 2, 2010

அவ்வளவு அழகு நீ..!!

உன் 
அழகையெல்லாம் சாறு பிழிந்து, 
வடிகட்டி எடுத்து வைத்தால் 
போதும்...
ஆயிரம் வருடங்களுக்கான 
தீங்கில்லாத "மது" தயார்..
அவ்வளவு அழகு நீ..!!  
**********************************************
போட்ட கோலத்தின் அழகை 
நீயே தலை சாய்த்து ரசித்து 
பின் குளிக்க செல்வாய் 
சுடு நீரில்...
"குனிந்து கோலம் போட்ட அழகை"
தீயாய் பார்த்திருந்த 
குருவி 
குளிக்க செல்லும் 
"சில்லென" இருக்கும் 
ஆற்று தண்ணீரில்...!!
************************************************
"இப்படியா ஒரு பொட்டபுள்ள"என்ற 
உன் அம்மாவின் வசவை கேட்டு 
சிணுங்கியபடி 
புரண்டு படுப்பாய் மீண்டும்..
பேரழகை ஜன்னல் வழியே கண்டு 
மருகிய குருவி கத்தும்....
இதைகேட்டு 
"மார்கழி மாதம்" வந்து விட்டதென 
மற்ற குருவிகளும் கிரிச்சிட 
விடியும் 
என் காலை பொழுது..
குட் மார்னிங்...!?

No comments:

Post a Comment

கருத்துக்களை பகிரலாமே...