June 28, 2009

உன் திருமண பத்திரிக்கை....

நீ 
சுகமாய்
உன் திருமண பத்திரிக்கை 

கொடுத்து போய் விட்டாய்...!

என் 

ஆத்ம நண்பர்களே...
என்னை பார்க்க 

இனி நீங்கள் வருவதாய் 
இருந்தால்.......

அவள் 

என் கடிதத்தை 
கிழித்த
அந்த ரயில் பாலத்தின் 

அருகேயோ..?

தினமும் 

அவள் வரும் 
அந்த பேருந்திலோ..?

பூக்கார அக்காவிடம்...
என் 

துக்கத்தை சொல்லிகொண்டோ..?

தாழிடப்பட்ட 

என் இருண்ட அறையிலோ..?

முத்தமிட்ட கோவிலின் 

பின் புறமோ..?

எங்காவது இருப்பேன்..!!!!

இல்லையென்றால் 


இறந்து போய் இருப்பேன்...
இறந்த சுவடுகூட இல்லாமல்..!

1 comment:

  1. enpa andha chinnna ponnu than ungaluku sikiya adimaya.... kaikatti unga polambala kekara....
    Pavam vitudunga avala...

    "Neenga indha snap" la smart ah irukinga ponga....

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...